நாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு இணையதளத்தில் ஏப்.15-ம் தேதி ஹால்டிக்கெட்
நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை வரும் 15ஆம் தேதி
இதற்கிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம்கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஜுன் 5-ல் தேர்வு முடிவு
இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 15-ம் தேதி www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *