மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஏற்கனவே பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது:

1. வண்டி எண் 12970: ஜெய்ப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக நேற்று கோவைக்கு புறப்படுவதாக இருந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. வண்டி எண் 12625: திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லிக்கு இயக்கப்படவேண்டிய கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3. வண்டி எண் 12295: பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக நாளை பாட்னாவுக்கு இயக்கப்படவேண்டிய சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary : Train number 12970, 12625, and 12295 has been cancelled due to Itarsi incident.