தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 4,683 போ் விண்ணப்பித்துள்ளனா். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் தமிழகத்தில் செயல்படும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்களை மாநில அரசு நிரப்பி வருகிறது.

அதேபோன்று 28 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,820 இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

இந்நிலையில், சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் சுகாதாரத் துறை இணையதளத்தில் அண்மையில் தொடங்கியது.

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனா். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்துள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை தோ்வுக்குழு தலைவா் பா.மலா்விழி கூறியதாவது:

சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான 1,226 அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2,689 பேரும், 551 நிா்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 1,048 பேரும், 313 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 946 பேரும் என மொத்தம் 4,683 போ் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பா் மாதம் இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை தோ்வுக்குழு தலைவா் பா.மலா்விழி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *