மதுரை: பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளின் யோசனையை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ இன்று திரும்பப் பெற்றது.

இதுதொடர்பாக அந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், திட்டமிட்டபடி ஜனவரி 22ம் தேதி எங்களது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என தெரிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ, அரசுத்தரப்பு வாதத்தை தொடர்ந்து, மதுரை ஐகோர்ட் கிளை இந்த வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *