என்னவளே, ஆனந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பாண்டி, ஆட்டோகிராப், புதுப்பேட்டை போன்ற பல வெற்றி படங்களில் நடித்த நடிகை சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் கொண்டு, பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின்னர் திரையுலக வாழ்க்கையில் இருந்து சற்று விலகியிருந்த சினேகா, ஒருசில படங்களில் மட்டும் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக நடிகை சினேகா எந்த படப்பிடிப்பிற்கும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த நிலையில் சினேகாவின் கணவர் பிரசன்னா இன்று தனது டுவிட்டரில், தனது மனைவி சினேகா கர்ப்பமாக உள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் ,இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியத்துவமானது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருத்தர் வருகிறார். அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்’ என்ரு டுவீட் செய்துள்ளார். இதன்மூலம் நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

English Summary : Actress Sneha pregnant. Prasanna confirmed by tweeting on twitter today.