அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அஜீத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் அனிருத் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

அஜீத்-ஷாலினி தம்பதிகளுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் தற்போது குழந்தையை கவனித்து கொள்தல், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்துதல் ஆகியவற்றில் அஜீத் தீவிரமாக இருப்பதாகவும், மிக விரைவில் அஜீத் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வீரம் படத்தை அடுத்த மீண்டும் அஜீத்துடன் இணையவுள்ள சிறுத்தை சிவா, இந்த படத்தை விறுவிறுப்பான ஆக்சன் படமாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Engish Summary : After Yennai Arinthal, Ajith joins with Siruthai Shiva for his next film. The film’s poojai was conducted by their director, producer, Music director.