கடந்த வெள்ளியன்று ரிலீஸான சூர்யாவின் “மாஸ்” திரைப்படம் தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில வசனங்களால் அஜீத், மற்றும் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதுகுறித்து அவர்கள் தங்கள் ஆதங்கத்தை டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பொதுவாக வெங்கட்பிரபுவின் படங்களில் ஹிட்டான பிற படங்களின் பிஜிஎம், வசனங்கள் மற்றும் கேரக்டர்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. அதேபோல் இந்த படத்திலும் சில விஷயங்கள் நடந்துள்ளன. விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் கேரக்டர் ஜெகதீஷ், மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகியவை சூர்யா கேரக்டருக்காகவும், அஜீத் நடித்த ஆரம்பம், வீரம் படங்களின் பிஜிஎம், மங்காத்தா படத்தின் கேரக்டரான விநாயக் மகாதேவ் ஆகியவை காமெடி நடிகரான பிரேம்ஜி அமரனுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோவு சூர்யாவுக்கு விஜய் கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்திவிட்டு, காமெடியனுக்கு அஜீத் கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்தியது குறித்து அஜீத் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் விஜய்யை கலாய்ப்பது போல் ஒருசில காட்சிகள் இருப்பதால் விஜய் ரசிகர்களும் வெங்கட்பிரபுவை விமர்சனம் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

English Summary : Since Vijay and Ajith films BGM, dialogues and some scenes are used in “Mass”, both Ajith and Vijay fans are offended and expressing their displeasure through social media.