கலைஞர் தொலைக்காட்சியில் “ஆதிரா” என்கிற திகில் நெடுந்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சினி டைம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை சி.ஜே.பாஸ்கர், பிஜு வர்கீஸ் ஆகியோர் இணைந்து இயக்க, ஸ்ரீ வாணி, ஜெய் தனுஷ், சாருதா, கண்மணி, சக்கரவர்த்தி, பூபதி, அஞ்சு அரவிந்த், பாலா சிங் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

நீலவேணி என்ற பெண், ஜமீன் குடும்பத்தை பழிவாங்க ஆவியாக அலைவது பற்றிய கதை. அவள் வேங்கையூரில் உள்ள ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவள். கிளியனூர் ஜமீன் குடும்பத்தின் முழு பரம்பரையையும் அழிக்க சபதம் எடுத்திருக்கிறாள். அவள் தனது சபதத்தை ஆவிக்குரிய சிறுவனான சிட்டி பாபுவின் உதவியுடன் செய்ய நினைக்கிறாள். அவளது சபதம் நிறைவேறியதா என்பதே இந்த தொடரின் மர்மமான திகில் கதை.

இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *