கோடைக்காலம் வந்துவிட்டது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை எங்கும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் மக்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுக்கும் சேவையை தொடங்கி இருக்கிறது. குளிர்ந்த மோர் என்பது தாகத்தை தனிப்பதோடு உடற்சூட்டையும் குறைக்கவல்லது. தினமும் சுமார் 100 லிட்டர் நீர் மோர் இலவசமாக பொதுமக்களுக்கு தி சென்னை சில்க்ஸ் தி. நகர் மற்றும் வேளச்சேரி கிளைகளில் வழங்கப்படுகிறது. காலை பத்து மணியிலிருந்து கடையின் ஊழியர்கள் மோரை வழங்குகின்றனர். கடந்த 6 வருடங்களாக இச்சேவை தொடர்கிறது.

தி சென்னை சில்க்ஸின் பொது மேலாளர், திரு. ரவீந்திரன் இதைப்பற்றி கூறியது, “சாதாரண குளிர்ந்த மோரை விட களைப்பை நீக்கி குளிர்ச்சியைத் தரும் ஒரு பானம் இருக்கமுடியாது. இளைஞர், முதியோர், ஆட்டோ ஓட்டுனர்கள், பாதசாரிகள், நடைபாதை வியாபாரிகள், மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் மோரைப் பருகி ஆனந்தமடைகின்றனர். கிட்டத்தட்ட் ஒரு நாளைக்கு 2000 நபர்களுக்கு மோர் வழங்கப்படுகிறது. ஆரோக்கியமான நீர்மோர் அளிக்கும் இச்சேவை ஏப்ரல், மே, மற்றும் ஜூன் முழுவதும் தொடரப்படும்”.

English Summary : Due to Summer The Chennai Silks offers free butter milk for people suffering because of the People escape the consequences of sun.