சென்னை காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன், உளவுத்துறை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும், இரண்டு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனே அந்த கட்டுப்பாடு அறை மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்தவர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தற்காலிகமாக, கட்டுப்பாட்டு அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.அதேபோல, தொழில் நுட்ப பிரிவில் பணிபுரியும், ஒரு போலீஸ்காரருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும், அவரது உறவினர்கள், எட்டு பேருக்கும் தொற்று உறுதியானது. மேலும் டி.ஜி.பி., அலுவலக துப்புரவு பணியாளர்கள், மூன்று பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இந்தநிலையில், சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *