electric trainசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கூடூர் செல்லும் பாதையில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஜனவரி 21, 23, 25, 28, 30 மற்றும் பிப்ரவரி 2, 4, 6, 9, 11, 13, 16, 18, 20, 23, 25, 27 மற்றும் மார்ச் 1, 3, 5, 8, 10, 12 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.25, 11.35, மதியம் 12.10, 1.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து சூலூர் பேட்டைக்கு மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூர்-சூலூர் பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சூலூர் பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர்-மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.50, 11.20, மதியம் 1, 1.35 மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர்-மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சூலூர் பேட்டையில் இருந்து மதியம் 12 மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பொன்னேரி-மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3.15 மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Electric train Service Change due to maintenance Work.