சென்னையில் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் இன்று திறக்கப்படுகிறது. சென்னை கிண்டி அருகேயுள்ள ஆசர்கான் பேருந்து நிறுத்தம் முற்றிலும் குளிரூடப்பட்ட பேருந்து நிறுத்தமாக மாற்ற கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து இன்று திறக்கப்படவுள்ளது.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த பேருந்து நிறுத்த திறப்பு விழாவில் ஆச்சி குழுமம் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக், விஜிபி நிறுவன தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம், ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இன்று காலை 10 மணிக்கு இந்த திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

இதுபோன்ற குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை நகரின் மற்ற பகுதியிலும் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

English Summary: First AC Bus Stand starts in Aasar Khan bus stop near Guindy, Chennai.