தமிழகத்தில் காலியாக உள்ள எஸ்ஐ பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வுக்காக சென்னை டாக்டர் அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இலவச பயிற்சி வகுப்பு ஒன்றை நேற்று முதல் தொடங்கியது.

தமிழக காவல் துறையில் 1078 உதவி எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இலவச வகுப்புகளை நடத்துகிறது. இந்த வகுப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.

நேற்று தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பு ஒரு மாதம் வரை நடைபெறும். சென்னை காவல்துறை குற்றவியல் பிரிவு இணை ஆணையர் ஜெயகுமார் இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புறை ஆற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி, காப்பீட்டுக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஜானகிராமன், ஜெயராமன், அம்பிகா, கவிமணி, கங்காதரன், வகுப்பாசிரியர் ஜெயாஜான், பயிற்சி மையத்தின் அமைப்பாளர்கள் வாசுதேவன், கிருஷ்ணா ஆகியோர் பேசினர். பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

English Summary : Free training classes will be conducted in Chennai at Dr. Ambedkar Education and Work Training Center for SI selection.