ருத்ராவை பழிவாங்க துடிக்கும் ஆதிரா..!

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.

சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், திவ்யாவுக்கு ஆதிராவின் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த திருமணத்தில் விருப்பமில்லாத திவ்யா, ரத்னத்தின் மகனான தான் விரும்பும் அருணுடன் சேர விரும்புகிறார். இதற்காக வீட்டை விட்டு வெளியேறும் திவ்யாவுக்கு விபத்தாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, திவ்யாவை காப்பாற்ற அருண் போராடுகிறார். தன் மகளான அனிதா, ருத்ரா வீட்டில் மகாராணியாக வளர்வது போல, தன் மகன் ருத்ரா வீட்டில் மாப்பிள்ளையாக வேண்டும் என சதி திட்டம் தீட்டும் ரத்னம், அருண் – திவ்யாவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

இந்த திருமணத்தில் சக்தி மீது சந்தேகம் வர, சக்தியை ருத்ரா வீட்டை விட்டு வெளியே அனுப்ப என தொடர் சூடுபிடிக்கிறது. இதற்கிடையே திருமணம் முடித்த கையோடு அருண், திவ்யாவை வெறுக்க, திருமணம் நின்றுபோன கோபத்தில் ஆதிரா ருத்ராவை பழிவாங்க துடிப்பது என தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *