nayantaara-1211ஜெயம் சகோதரர்களுடன் நடித்த ‘தனி ஒருவன்’, திகில் மற்றும் பேய்ப்படமான ‘மாயா’, விஜய்சேதுபதியுடன் நடித்த ‘நானும் ரெளடிதான்’ ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்த நடிகை நயன்தாரா தற்போது சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜீவாவுடன் ‘திருநாள்’, கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் மம்முட்டியுடனும், தெலுங்கில் வெங்கடேஷுடன் ஒஅவர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ‘மாயா’வை அடுத்து மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சற்குணம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் அவரது உதவியாளர் முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்த படத்தில்தான் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், ‘மாயா’ படம் போன்ற இந்த படத்திலும் அவருடைய கேரக்டரையே சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு சூதுகவ்வும் படத்தினை ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் ‘தனி ஒருவன் படத்தை எடிட் செய்த கோபிகிருஷ்ணா எடிட்டிங்கும் செய்யவுள்ளனர். இந்த படத்திற்கு ‘மாயா 2’ என்ற டைட்டில் வைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
english summary-Nayanthara in maya 2