கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தின் விசாரணை ஆணையத்தின் கால வரம்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கான கட்டடம் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டியது தொடர்பாக எழுந்த பல்வேறு முறைகேட்டுப் புகார்கள்ளை விசாரணை செய்ய ஆணையம் ஒன்றை தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி அமைத்தது.

உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி இதற்கான விசாரணையை தற்போது நடத்தி வருகிறார். இந்த விசாரணை ஆணையத்தின் காலம் நேற்றுடன் (ஏப்ரல் 22) முடிவடைந்த நிலையில், ஆணையத்தின் விசாரணைக் கால வரம்பை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பொதுத் துறை செயலாளர் யத்தேந்திர நாத் ஸ்வைன் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : New Secretariat building inquiry time limit extended for more 3 months.