சென்னையில் சமீபத்தில் 60வது ரயில்வே வார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த கேடயத்தை திருச்சி கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால் பெற்று கொண்டார்.

இந்த விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் இந்த விழாவில் பேசியபோது, “பயணிகளின் பாதுகாப்பு கருதி தென்னக ரயில்வே எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக ரயில் எஞ்ஜின் ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், 17 முக்கிய ரயில் நிலையங்களில் எல்.ஈ.டி. சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் பெண் பயணிகள் பாதுகாப்புக்காக 14 முக்கிய ரயில் நிலையங்களில் 1,300 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பாக சக்தி படை எனப்படும் பெண் காவலர் படை புறநகர் ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

English Summary : Southern Railway announces ‘Power Force’ for the safety of female passengers.