புதுயுகம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “ஆலய வலம்”.

“கோவில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி.
அதற்கிணங்க நமது தெய்விகத் தமிழகம்,கோவில்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது. தேவார மூவரால் பாடல் பெற்ற சிவாலயங்கள், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவ திவ்ய தேசங்கள், திருப்புகழில் போற்றப்பட்டுள்ள திருக்குமரன் கோவில்கள், அருளாட்சி நடத்தும் அம்மன் ஆலயங்கள், பரிகாரத் திருத்தலங்கள், மகான்களின் அருட்தலங்கள் என ஆயிரக்கணக்கான திருக்கோவில்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த ஆலயங்களின் ஆன்மிக மகிமைகள், ஸ்தல புராணச் சிறப்புகள், வரலாற்றுத் தகவல்கள், பாடல் விளக்கங்கள், கலையம்சங்கள், பரிகாரப் பலன்கள், கோவில் திருவிழாக்கள், அமைவிடம், செல்லும் வழி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சுவைபடத் தருகின்ற நிகழ்ச்சிதான் புதுயுகம் தொலைக்காட்சியின் *”ஆலய வலம்”.*

வாரந்தோறும் ஒரு ஆலயத்தை நேரடியாக வலம் வருவதைப் போன்ற ஆன்மீக அனுபவத்தை தரும் திருத்தலத் தொகுப்பான இந்நிகழ்ச்சியை, மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பத்மன் தொகுத்தளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *