கடந்த 1990களில் பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து அதன் பின்னர் குணசித்திர நடிகராக மாறிய ராஜ்கிரண் 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்னெ பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற ஹிட் படங்களின் மூலம் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ என பல அவதாரங்களில் ஜொலித்த ராஜ்கிரண், சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின்னர் மீண்டும் சண்டக்கோழி, சேவல், முனி, காவலன், மஞ்சப்பை, கொம்பன் ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து தன்னை மீண்டும் கோலிவுட் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் ராஜ்கிரண் தற்போது ஒரு புதிய படத்தை இயக்க ஆரம்ப கட்ட பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ராஜ்கிரண் விரைவில் வெளியிடுவார் என்றும், அவர் இயக்கவுள்ள புதிய படம் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வித்தியாசமான கதையம்சத்துடன் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary : Famous Actor, Director,and Producer Rajkiran plans to direct a film after 20 long years.