பல வெற்றி படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்து வரும் முன்னணி நிறுவனமான ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கிய நலன்குமாரசாமி இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் 15 ஆம்தேதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் கூருகின்றன.

நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமான ‘சூது கவ்வும்’ டீம் அப்படியே இந்த படத்திலும் பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. சூது கவ்வும் படத்தில் நடித்திருந்த பாபிசிம்ஹா, கருணாகரன், அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுளார்.

காமெடி மற்றும் த்ரில்லர் திரைக்கதையுடன் மீண்டும் களமிறங்கும் நலன்குமாரசாமி, இந்த படத்தில் விஜய் சேதுபதியை இதுவரை யாரும் காண்பிக்காத வித்தியாசமான கோணத்தில் காட்டயிருப்பதாக கூறியுள்ளார். சென்னையில் தொடர்ச்சியாக 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

English Summary : “Soodhu Kavvum” Team recombined with Vijay Sethupathy.