மகதீரா, நான் ஈ ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது பெரும் பொருட்செலவில் இயக்கி வரும் திரைப்படம் ‘பாஹுபாலி’. அனுஷ்கா ஷெட்டி, ராணா, அல்லு அர்ஜூன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசயமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு அளவில் முடிவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தென்கொரிய தலைநகர் சியோல் நகரத்திற்கு சென்றிருப்பதாகவும், அங்கு சீன, மற்றும் கொரிய விஷுவல் எபெக்ட் நிபுணர்களுடன் இணைந்து இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை ராஜமவுலி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதல் பாகம் வரும் மே மாதமும் இரண்டாவது பாகம் 2016ஆம் ஆண்டிலும் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Famous Director of Telugu industry Mr.S.S.Rajamouli’s next movie “Baahubali”s Graphics work is now done by South Korea’s visual effects.