சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுக்கான தகுதிச் சுற்று பேச்சுப் போட்டி வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கு மத்திய சென்னை அரிமா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டியை மத்திய சென்னை அரிமா சங்கம் தொடர்ந்து நடத்தி வருகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் (அறை எண் எம்28) வரும் அக்டோபர் 25-ஆம் தேதி பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியில் இருந்து தகுதிச் சான்றிதழைப் பெற்று வர வேண்டும்; அவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம். போட்டி குறித்த தலைப்புகள், விதிமுறைகளை www.lionsclubofcentralmadras.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

போட்டியின் தகுதிச் சுற்று முடிவடைந்த பின்னர் இறுதி போட்டிக்கான நாள், நேரம் இடம் ஆகியவை அறிவிக்கப்படும். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என ரொக்கப் பரிசு வழங்கப்படும். கல்லூரிகளுக்கு பதக்கங்களும் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *