விஷால், ரீமாசென், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘திமிரு’. இந்த படத்தை தருண்கோபி இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே சிம்பு நடித்த ‘காளை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களை இயக்கிய பின்னர் அவர் நடிகராக மாறிவிட்டார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருந்த தருண்கோபி தற்போது ‘வெறி’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் திமிரு படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது.

தருண்கோபி இயக்கும் இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் என்பவர் தயாரிக்கிறார்.

English Summary : Thimiru Part II in Tarun Gopi