சென்னையில் பத்து காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை ஆய்வாளர்களின் இடமாற்றம் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம் காரணத்திற்காகவும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர்களில் வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு, கிண்டி இன்ஸ்பெக்டர் சரவணன், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர்களும் அடங்குவர். இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆய்வாளர்களும் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய பணியிடத்தில் பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.