வரும் மே 3-ம் தேதி முதல் செல்போன் பயன்படுத்துவோர் நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களது எண்ணை மாற்றிக் கொள்ளலாம் என தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்களை அந்தந்த தொலைத் தொடர்பு வட்டாரங்களுக்குள் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இனி நாடு முழுவதிலும் இத்தகைய வசதி இவ்வசதி விரிவு படுத்த பட்டுள்ளது

உதாரணமாக சென்னையிலிருந்து ஒருவர் மாற்றலாகி மும்பை சென்றால் அவர் தனது பழைய மொபைல் எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு மும்பையில் உள்ள செல்போன் சேவை நிறுவனத்தின் சேவையைப் பெறலாம். இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே எண்ணை தக்க வைத்துக் கொண்டு விரும்பிய செல்போன் சேவை நிறுவனங் களுக்கு மாற முடியும்.

English Summary : On May 3, SIM can be registered to any location. for example, SIM bought in Chennai can be register in Delhi without changing their number.