சென்னை ‘வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8 சதவீதமாக தொடரும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., என்ற, வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை பின்பற்றி, தமிழகத்திலும், வருங்கால வைப்பு நிதிக்கு, 8 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 2018 அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *