தமிழகத்தில் உள்ள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது.

கடந்த 2008ஆம் தீவிரவாதிகள் கடல் வழியே ஊடுருவி மும்பை தாஜ் ஓட்டலில் நாசவேலையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை காவல் துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி கடலோர பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.

ஆபரேஷன் ஆம்லா’ என்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் போன்று ஊடுருவி வரும் போலீஸார்களை கடலோர பாதுகாப்பில் இருக்கும் போலீசார் பிடிப்பார்கள். இந்த ஆபரேஷன் இன்று காலை தொடங்கி 36 மணி நேரம் நடைபெறும்.,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த ஆம்லா ஆபரேஷன் ஏழாவது முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆபரேஷனுக்காக நேற்றிரவு முதலே அனைத்து கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.