அரசியல் கட்சியினர் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கவும், கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்லவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கில் தாமாக முன்வந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்துள்ள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் தவறு என்பதை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர்களை வைப்பது தொடர்பாக ஏற்கனவே பல உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியது.

இதேபோல அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்களை அதிக அளவில் லாரி, பேருந்து, ஆட்டோ, வேன் ஆகியவற்றில் அழைத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது என்று கூறிய நீதிபதிகள், அரசியல் கட்சியினர் தங்களது கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல தடை விதித்தனர்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்க தாமாக முன்வந்து உத்தரவிட்ட நீதிபதிகள், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *