சென்னை வட்டார பாரத ஸ்டேட் பாங்க் சார்பில் நடத்தப்பட்ட மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

பெண்களின் உடல் நலம் காத்தல் மற்றும் மார்பக புற்றுநொய் விழிப்புணர்வு ஓட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று காலை நடந்த விழிப்புணர்வு ஓட்டம் 3 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ என 3 பிரிவுகளில் நடந்தது. இந்த ஓட்டத்தை பாரத ஸ்டேட் வங்கியின் (சென்னை வட்டாரம்) தலைமை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொது மேலாளர்கள் தீபக்குமார், ஜி.ரீட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் பெண் ஊழியர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியைகள், மாணவிகள், மாற்றுத்திறன் பெண்கள் ஆகியோர் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

7 வயது குழந்தைகள் முதல் 75 வயது மூதாட்டி வரை கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு ஓட்டத்தின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

English Summary : On behalf of State Bank Of India, Breast cancer awareness is conducted in Chennai. More than 10,000 women participated.