சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

ரயில் எண் 06015 என்ற சிறப்பு ரயில் ஏப்ரல் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும் அதேபோல் மறுமார்க்கத்தில்
ரயில் எண் 06016 என்ற சிறப்பு ரயில் ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில், வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் பயணிகள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்துமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

English Summary: Special Train runs from Chennai Egmore to Tirunelveli on April 23rd.