கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு “கெளரி” என்கிற தெய்வீக மெகாத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடரில் கண்பார்வை இழந்த துர்காவுக்கு பல போராட்டங்களை தாண்டி கண் பார்வை கிடைக்கிறது. மறுபுறம், தன் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு செல்ல ஆவுடையப்பன் தன் குடும்பத்துடன் செல்கிறார்.

ஊர் மக்கள் அனைவரும் துர்காவை காணாமல் தேட, துர்கா மருத்துவமனையில் இருப்பதாக சொல்ல, துர்கா இல்லாமல் திருவிழாவை எப்படி நடத்துவது என்று ஊர் மக்கள் குழம்பி நிற்க, துர்கா, அசோக், கௌரி திருவிழாவில் கலந்து கொள்ள ஊருக்கு வருகின்றனர்.

ஜெயிலுக்கு போய் வந்ததால் துர்கா இனி திருவிழாவில் பங்கேற்க கூடாது என ஊரில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, பிரச்சனைகளை கடந்து துர்கா திருவிழாவில் கலந்து கொள்கிறாள். இதற்கிடையே ஊரில் ஓர் துர்மரணம் ஏற்பட, அதனால் கோவில் நடையை அடைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோவில் நடையை அடைத்தால் காலன், கெளரியின் சக்தியை அபகரித்து விடும் சூழல் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *