சென்னை கோட்டூர்புரத்தில் ஜூன் 13ஆம் தேதி, பத்மபூஷன் விருது பெற்ற முன்னணி ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பாராட்டு விழா, “பேனாக்கள் பேரவை” சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக, இயக்குநர் முத்துராமன், உரத்த சிந்தனை தலைவர் பத்மினி பட்டாபிராமன், சாய் சங்கரா மேட்ரிமோனி நிறுவனர் பஞ்சாபகேசன், செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன், இயக்குநர்கள் சித்ரா லட்சுமணன் மற்றும் பாக்யராஜ், கிளீவ்லேண்ட் நிறுவனர் சுந்தரம், தபம்ஸ் மேகநாதன், மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன், ஆடிட்டர் பாலசுப்ரமணியன், ஊடகவியலாளர் விஜயகிருஷ்ணன், வண்ணப்பட யோகா ஆகியோர் பங்கேற்று, நல்லி குப்புசாமி அவர்களின் சாதனைகளைப் பாராட்டியர்.

இந்த விழா, ஜவுளித் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்கு மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *