வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் மணப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது.

இந்த முகாமுக்கு நேரில் வருகை தந்த தமிழக தேர்தல் அதிகாரி சதீப் சக்சேனா, வாக்காளர் பட்டியலில் தனது ஆதார் அட்டையை இணைத்தார். மேலும் அவருடன் வந்திருந்த அவருடைய மனைவியின் ஆதார் எண்ணும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டது.

அதன்பின்னர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த சந்தீப் சக்சேனா, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறினார். அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சண்முகம், மண்டல உதவி கமிஷனர் என்.மகேசன், செயற்பொறியாளர் முரளி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

English Summary : Tamil Nadu government undergoing a process of adding Aadhar numbers to the voter ID.