வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10ஆம் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது பிளாட்பாரம் டிக்கெட் ஒரு நபருக்கு ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறாது. இந்த கட்டணத்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.5ல் இருந்து ரூ.10ஆக உயர்த்த உள்ளதாகவும், அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் ஏற்படும் அளவுக்கு அதிகமான கூட்ட நெறிசலை கட்டுப்படுத்த ரூ.10க்கு மேல் உயர்த்தவும் கோட்ட மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும் வசதியும் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Platform ticket to be increase from Rs.5 to Rs.10 from April 1.