நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

கொரோனா அரக்கனை நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து விளக்குகளையும் அணைத்து, விளக்குகளை ஏற்றி நாட்டு மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடியின் தாயும், குஜராத்தில் தனது இல்லத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டார்.