தெகிடி படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ், தற்போது “ஜீரோ’ என்ற படத்தில் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘உயிரே உன் உயிர் என நான் இருப்பேன்’ என்று தொடங்கும் பாடல் ஒன்றை பாட அவர் பல பாடகர்களை பரிசீலனை செய்ததாகவும், இறுதியில் இந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடினால் பொருத்தமாக இருக்கும் என அவர் கருதியதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடுவது கடினம் என்பதை அறிந்த நிவாஸ், பின்னர் அனிருத்தை அணுகியதாகவும், அவரும் மகிழ்ச்சியுடன் பாட ஒப்புக்கொண்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். அனிருத் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஸ்பீடான பாடல்களையே அதிகளவில் பாடியுள்ள அனிருத் முதல்முறையாக இந்த மெலடி பாடலை பாட ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இசையமைப்பாளர் நிவாஸ், விஜய் சேதுபதி முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசையமைக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இயக்குகிறார்.

English Summary : After successful rap songs, Anirudh now composes a melody for the new film.