அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத் தில் உள்ளது. கடந்த 3 ஆண்டு களில் தொடங்கப்பட்ட 15 லட்சத்து 95 ஆயிரம் கணக்குகளில் ரூ.2,940 கோடி டெபாசிட் செய்யப்பட் டுள்ளது.

பெண் குழந்தைகளின் மேம்பாட் டுக்காக ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ (செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்) என்ற சிறு சேமிப் புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.

10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர் களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இந்த கணக்கை தொடங்கலாம். அனைத்து அஞ்சல் கிளை அலுவலகங்களிலும் குறிப் பிட்ட வங்கிகளிலும் இந்த கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

முதலில் ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகையை மாதம் தோறும் செலுத்தலாம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறையும் செலுத்தலாம்.

ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும். கணக்கு தொடங்கியதிலிருந்து குறைந்தபட்சம் 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். 21-வது ஆண்டில் கணக்கு முதிர் வடையும். அப்போது கணக்கில் சேர்ந்துள்ள பணத்தை அந்த பெண் குழந்தையே எடுத்துக் கொள்ளலாம்.

கணக்கு வைத்துள்ள பெண் ணுக்கு 18 வயது நிரம்பியிருந்தால் அல்லது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு உயர்கல்விக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ள முடியும். செல்வ மகள் சேமிப்பு கணக்குக்கு தற்போது ஆண்டுக்கு 8.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத் துக்கு செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரி விலக்கு சலுகை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தைச் சேர்ந்த அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: செல்வ மகள் திட்டத்தின் கீழ் முதலில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்று இருந்தது. தற்போது கிராமப்புற மக்களும் அதிகம் பயன்பெறும் வகையில் அந்த தொகை ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்க ளது பெண் குழந்தையின் பெயரில் அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக, நாட்டி லேயே அதிகபட்சமாக தமிழகத் தில் கடந்த ஜூன் 30-ம் தேதி வரை 15.95 லட்சம் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள் ளன. அந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ.2,940 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 15.09 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் ரூ.1,288 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *