சென்னை: ‘போலீசாருக்கு, சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என டி.ஜி.பி.-டி.கே.ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதி கிருபாகரன், ‘போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஏன் விடுமுறை அளிக்க கூடாது’ என, கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, டி.ஜி.பி.-டி.கே.ராஜேந்திரன், அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘போலீசாருக்கு, சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என, தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *