விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்து சாதாரண நாட்களில் படுக்கை மற்றும் ஏசி வசதியுள்ள அரசு விரைவு பேருந்துகளில் கட்டணத்தைக் குறைத்து வசூலிக்கும் முறையை விரைவு போக்குவரத்துக் கழகம் அமல்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக் குவரத்துக் கழகத்துக்கு அதிநவீன வசதியுள்ள 40 புதிய பேருந்துகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. படுக் கையுடன் கூடிய ஏசி, கழிப்பறை, தீயணைப்புக் கருவி, அவசரக்கால கதவு மற்றும் ஜன்னல், தானியங்கி கதவு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும் 60 சொகுசுப் பேருந்து கள் விரைவில் விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் இணைக்கப் படவுள்ளன. இதற்கிடையே, இந்த புதிய வகை பேருந்துகளில் கிமீ.க்கு ரூ.2 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை – சேலம் ரூ.725, போடிநாயக்கனூர் ரூ.1,110, ஈரோடு ரூ.905, கோபிசெட்டிபாளையம் ரூ.955, மதுரை ரூ.975, கரூர் ரூ.820, கோயம்புத்தூர் – பெங்களூருவுக்கு ரூ.805 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்து சாதாரண நாட்களில் கட்டணத்தை சிறிய அளவில் குறைத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திங்கள் முதல் புதன்கிழமை வரையில் கழிப்பறை வசதியுள்ள சொகுசுப் பேருந்துகளுக்கு ஒரு கிமீ.க்கு ரூ.1.05 எனவும், படுக்கை வசதியுள்ள ஏசி பேருந்துகளுக்கு கிமீ.க்கு ரூ.1.80 எனவும், படுக்கை வசதியுள்ள சொகுசு பேருந்துகளுக்கு கிமீ.க்கு ரூ.1.35 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதுவே, வியாழன் முதல் ஞாயிறு வரையில் (விடுமுறை, பண்டிகை நாட்களுக்கும் பொருந் தும்) கழிப்பறை வசதியுள்ள சொகுசுப் பேருந்துகளுக்கு கிமீ.க்கு ரூ.1.15 எனவும், படுக்கை வசதியுள்ள ஏசி பேருந்துகளுக்கு கிமீ.க்கு ரூ.2 எனவும், படுக்கை வசதியுள்ள சொகுசு பேருந்துக ளுக்கு கிமீ.க்கு ரூ.1.55 எனவும் கட்டணம் நிர்ணயம் செய் யப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளுக்கு சிறப்பான பேருந்து வசதியை கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் தொடங்கப் பட்டுள்ள புதிய வகைப் பேருந் துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிக ரிக்க சாதாரண நாட்களில் பயணம் செய்யும் மக்களுக்கு கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப் படும்போது விரைவு போக்குவரத் துக் கழகத்தின் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *