தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு இன்று (மார்ச் 1) முதல் வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அரசு மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் சேர்த்து 406 பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடக்கிறது. முதல் பேட்சாக 158 பள்ளிகளில் இன்று (மார்ச் 1) முதல் மார்ச் 4ம் தேதி வரையும், அடுத்த பேட்சாக 145 பள்ளிகளில் மார்ச் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரையும் செய்முறை தேர்வுகள் நடக்க உள்ளன. முறையான ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் எழுதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *