சென்னை பெருநகரக் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீன அடிப்படையிலும் அவ்வப்போது பணியிட மாற்றம் நடந்து வருவது வழக்கமே. இந்நிலையில் நேற்று 18 ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.

சென்னை மெரீனா காவல் நிலைய ஆய்வாளர் சிபுகுமார், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்துக்கும், துரைப்பாக்கம் ஆய்வாளர் மகேஷ்குமார் சூளைமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், தரமணி ஆய்வாளர் கே.ஜெகதீசன் மாங்காடு குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 15 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 7 ஆய்வாளர்கள், மீண்டும் காவல் நிலையப் பணிக்கு மாற்றி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

English Summary: 18 Superintendent of Police were transferred in Chennai.