சென்னை பெருநகரக் காவல் துறையில் 19 காவல் ஆய்வாளர்கள் நேற்று முன் தினம் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர ஆணையர் எஸ்.ஜார்ஜ் அவர்களின் உத்தரவின்படி இந்த பணியிட மாற்றல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் விபரம் பின்வருமாறு:

சென்னை பெருநகரக் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் ஆகியவற்றின் அடிப்படையிலும் காவல் ஆய்வாளர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கமானதே. இந்த வகையில் சென்னை பெருநகரக் காவல் துறையில் 19 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கடந்த புதன்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இதில், மெரீனா குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சூர்யலிங்கம், சித்தாலப்பாக்கம் காவல் நிலையத்துக்கும், கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் சிபுகுமார், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை காவல் நிலையத்துக்கும், அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 19 காவல் ஆய்வாளர்களும் ஓரிரு நாள்களில் தங்களது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

English Summary : 19 police inspectors transferred from chennai.