மார்ச் 2020 நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:

தேர்ச்சி விகிதம்:
* மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.3%
* மாணவியர் 94.80%
* மாணவர்கள் 89.41%

மாவட்ட வாரியாக விவரம்:
* 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்.
* 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம்.
* 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3-ம் இடம்.

பள்ளிகள் தேர்ச்சி சதவிகிதம்:
* அரசு பள்ளிகளில் 85.94% தேர்ச்சி
* அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சி
* மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சி
* இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72% தேர்ச்சி
* பெண்கள் பள்ளிகள் 94.81% தேர்ச்சி
* ஆண்கள் பள்ளிகள் 83.91 தேர்ச்சி

மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 7,127 – 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்ப பள்ளிகளின் எண்ணிக்கை 2,120

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:
* அறிவியல் பாடப் பிரிவுகள் 93.64%
* வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.96%
* கலைப்பிரிவுகள் 84.65%
* தொழிற்பாடப்பிரிவுகள் 79.88%

முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்:
* இயற்பியல் 95.94%
* வேதியியல் 95.82%
* உயிரியல் 96.14%
* கணிதம் 96.31%
* தாவரவியல் 93.95%
* விலங்கியல் 92.97%
* கணினி அறிவியல் 99.51%
* வணிகவியல் 95.65%
* கணக்குப் பதிவியல் 94.80%

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2835. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2506.

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 50.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *