24 சிறப்பு ரயில்கள் சென்னையில் இருந்து: தீபாவளியை முன்னிட்டு

தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும் பூரில் இருந்து 24 சிறப்பு ரயில்களை இயக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக அதிகாரி கள் கூறினர்.

தீபாவளி நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்து விரைவு ரயில் களிலும் தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்கள் அறிவிப்புக் காக மக்கள் காத்திருக் கின்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது:

‘‘சென்னையில் இருந்து பல்வேறு இடங் களுக்கு வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில் களில் முன்பதிவு முடிந்து விட்டது. காத்திருப்பு பட்டி யல் அதிகம் உள்ள வழித் தடங்களை தேர்வு செய் துள்ளோம். ரயில்வே உயர் அதிகாரிகள் தலைமை யில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. அதன் படி, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட் ரல், எழும்பூரில் இருந்து 24-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கலாம் என எதிர்பார்க்கிறோம். முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்கவும், வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளையும் இணைத்து இயக்கவுள்ளோம்’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *