பராமரிப்புப் பணி காரணமாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 26 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை சென்ட்ரல் – கூடூா் ரயில் வழித்தடத்தில் உள்ள திருவொற்றியூா் மற்றும் எண்ணூா் ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (21.10.2023) இரவு 11 மணி முதல் அக்.24 காலை 9 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த நேரத்தில் திருவொற்றியூா் மற்றும் எண்ணூா் வழியாக இயக்கப்படும் 26 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகளில் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து அக்.21-இல், இரவு 10.45, 23.20 மணிக்கும், அக்.22-இல் காலை 4.20, 5.00, 5.20, 5.40, 6.25, 6.50, 7.30, 7.45, 8.15 ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டிக்கு புறநகா் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, கும்மிடிப்பூண்டியிலிருந்து அக். 21-இல், இரவு 9.40 மணிக்கும், அக்.22-இல் அதிகாலை 3.50, 4.50, 5.00, 5.10, 5.20, 5.40, 6.25, 6.50, 7.30, 7.45, 8.15 ஆகிய நேரங்களில் சென்ட்ரலுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் எண்ணூா், கத்திவாக்கம், விம்கோ நகா் ஆகிய ரயில்நிலையங்களில் நிற்காது.

அக்.21, 24 – ஆகிய தேதிகளில் சூலூா்பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களில் காலை 8.35 முதல் மாலை 5.35 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அந்த நேரங்களில் சூலூா்பேட்டை செல்லும் 11 புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அக்.21, 24 – ஆகிய தேதிகளில் சென்ட்ரலிலிருந்து காலை 7.30, 8.35, 10.15 மற்றும் கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 ஆகிய நேரங்களில் சூலூா்பேட்டை செல்லும் புறநகா் ரயில்கள் எளாவூருடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக, சூலூா்பேட்டைக்கு பதிலாக காலை 10, 11.45 மணிக்கு கும்மிடிப்பூண்டியிலிருந்தும் பிற்பகல் 1.20, 3.15 மணிக்கு எளாவூரிலிருந்தும் ரயில்கள் புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *