சென்னை: மின்வாரியம் நடத்திய பேச்சின் போது, ’30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்’ என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மின் வாரியத்தில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட, கள பிரிவு ஊழியர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு, ‘போனஸ்’ வழங்கப்படுகிறது. அடுத்த மாதம், தீபாவளி வருவதால், போனஸ் நிர்ணயம் செய்ய, சென்னையில், மின் வாரிய உயரதிகாரிகள், 17 தொழிற்சங்க நிர்வாகிகளுடன், நேற்று பேச்சு நடத்தினர்.

இதில் பங்கேற்ற பலரும், நிரந்தர ஊழியர்களுக்கு, 30 சதவீதமும், ஒப்பந்த ஊழியர்களுக்கு, 8,000 ரூபாயும் போனஸ் வழங்க வலியுறுத்தினர். மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தொழிற்சங்கங்களின், 30 சதவீத போனஸ் கோரிக்கை குறித்து, தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும்; போனஸ் குறித்த அறிவிப்பை, அரசு வெளியிடும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *