சென்னை மக்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான இந்த மெட்ரோ ரயிலில் இதுவரை 34,13,349 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்த ரயில்களை மொத்தம் 35 ஓட்டுநர்கள் இயக்கிவருகின்றனர். இவர்களில் ஏ.ப்ரீத்தி (29), எம்.அம்சவேனி (27), என்.சுபத்ரா தேவி (23), ஏ.நளினி (22), ஜி.ஜெயஸ்ரீ (24) ஆகிய 5 பேர் பெண்கள். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் துறையில் மூன்றாண்டு பட்டயப் படிப்பை முடித்துள்ள இவர்கள், 2013-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.

பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து, மெட்ரோ ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சியை டெல்லி மெட்ரோ ரயிலில் மேற்கொண்டனர்.

English Summary: 34 lakh passengers were traveled in Chennai Metro rail till today.