தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46 ஆவது புத்தகக் கண்காட்சி இன்று (ஜனவரி 06) முதல் தொடங்கி ஜனவரி 22-ம் தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகிறது.

புத்தகக் கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். புத்தக கண்காட்சியை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில் கருணாநிதி பொற்கிழி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் விருதுகளை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

40-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் விடுமுறையை திட்டம்மிட்டு புத்தக் கண்காட்சி திறந்துவைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *