ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்காத வண்ணம் தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஏப்ரல், மே மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான அரிசியை கொள்முதல் செய்வதற்காக 84 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *