சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியளார்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர்.

சென்னை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியாளர்கள் வேலைக்கு 2 பேர் எடுக்கப்படுகின்றனர். இந்த திட்டப்பணியாளர் பணி 3 வருடங்கள் நடைபெறும். இந்திய அரசின் தாவர தொழில்நுட்பத்துறை சார்பில் நடைபெறும் தாவர நோய்த்தோற்று கிருமிகள் தொடர்பான திட்டப்பணிக்காக இந்த 2 வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி அல்லது எம்.டெக் பிரிவில் உயிரி இயற்பியல், உயிரித் தொழில்நுட்பம், உயிர் தகவலியல், கணக்கீட்டு உயிரியல், நுண்ணுயிரியல் அல்லது மரபணு பொறியியல் என, இதில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்து மற்றும் நேரடித் தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகளில் வென்று, பணியில் சேர்ந்தால் மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை இந்த (pkarthe@gmail.com) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *